பார் கவுன்சில் உறுப்பினர் தேர்தல்: கரூர், குளித்தலையில் வாக்குப்பதிவு
தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கு, கரூர் மற்றும் குளித்தலை நீதிமன்றங்களில் புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கு, கரூர் மற்றும் குளித்தலை நீதிமன்றங்களில் புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் கரூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் குளித்தலை சார்பு நீதிமன்றங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், கரூர் நீதிமன்றங்களில் பணியாற்றும் 433 பேரும், குளித்தலை சார்பு நீதிமன்றத்தில் பணியாற்றும் 150 பேரும் புதன்கிழமை வாக்களித்தனர். விடியோ பதிவுடன் நடைபெற்ற இந்தத் தேர்தலில் வழக்குரைஞர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதுதொடர்பாக வழக்குரைஞர்கள் மேலும் கூறியது: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கான 25 உறுப்பினர்களைத் தேர்வு செய்ய 53,000 வழக்குரைஞர்கள் வாக்களிக்கிறார்கள். மொத்தம் 192 பேர் வேட்பாளர்களாகப் போட்டியிடுகிறார்கள். தேர்வு செய்யப்படும் உறுப்பினர்கள், பின்னர் அவர்கள் தலைவர், துணைத் தலைவர் மற்றும் செயலர் உள்ளிட்ட நிர்வாகிகளைத் தேர்வு செய்வார்கள் என்றார்.