முதியவரிடம் அரிவாள் காட்டி மிரட்டிய ரௌடி கைது
முதியவரை அரிவாள் காட்டி மிரட்டிய ரௌடியைப் போலீஸார் கைது செய்தனர்.
முதியவரை அரிவாள் காட்டி மிரட்டிய ரௌடியைப் போலீஸார் கைது செய்தனர்.
கரூர் அருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராசப்பன் (74). இவர் செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டின் முன் நின்றுள்ளார்.
அப்போது அவ்வழியே வந்த பிரபல ரௌடியான அதே பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (35) ராசப்பனை பார்த்து, கையில் வைத்திருந்த அரிவாளால் வெட்டி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுதொடர்பாக ராசப்பன் அளித்த புகாரின்பேரில் ஜெயபிரகாஷை வெங்கமேடு போலீஸார் கைது செய்தனர்.