அரசு பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய முதியவர்கள் மீது வழக்கு
அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய இரு முதியவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய இரு முதியவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் லந்தக்கோட்டையைச் சேர்ந்தவர் கண்ணபிரான்(42). இவர் கரூர் - மாமரத்துப்பட்டி வழித்தடத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல சனிக்கிழமை பேருந்தை மேலசக்கரக்கோட்டை என்ற இடத்தில் ஓட்டிச்சென்றபோது கரூர் பாப்பனாம்பட்டியைச் சேர்ந்த சுப்பையா (61), மாரிமுத்து (60) ஆகியோர் பேருந்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.
அப்போது ஓட்டுநருக்கும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சுப்பையா, மாரிமுத்து ஆகியோர் ஓட்டுநர் கண்ணபிரானைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கண்ணபிரான் அளித்த புகாரின் பேரில், சிந்தாமணிப்பட்டி போலீஸார் சுப்பையா, மாரிமுத்து ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.