தேசிய உழவர் உழைப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்
கரூரில் தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்தினர் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூரில் தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்தினர் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா ஆர்எம்எஸ். அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு உழவர் உழைப்பாளர் கழக நிறுவன தலைவர் ஜோதிகுமார் தலைமை வகித்தார். நொய்யல் சாயக்கழிவு கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், குட்கா ஊழல் வழக்கில் சிக்கியவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை ஆணையத்தை தமிழகத்திற்கு சாதகமாக அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உழவர் உழைப்பாளர் கழகத்தினர் திரளாகப் பங்கேற்றனர்.