கரூர்

டாஸ்மாக் ஊழியரை வெட்டிவிட்டு ரூ.4.79 லட்சம் கொள்ளை

DIN


கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த நெய்தலூர் காலனியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் விற்பனையாளராக சூரியனூர் ஊராட்சிக்குட்பட்ட மேலப்பட்டியைச் சேர்ந்த பெரியசாமி(40) என்பவர் விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறார்.
வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டு, மது விற்ற பணம் ரூ.4.79 லட்சம் எடுத்துக்கொண்டு பைக்கில் வீட்டுக்குச் சென்றார். பெரியபனையூர் மாகாளியம்மன் கோயில் அருகே சென்றபோது திடீரென மூன்று பைக்குகளில் முகமூடி அணிந்து வந்த 6 பேர் அவர் மீது மிளகாய்ப் பொடி தூவியுள்ளனர். பின்னர் தோள்பட்டையில் அரிவாளால் வெட்டிவிட்டு அவரிடமிருந்த ரூ.4.79 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு ஓடி விட்டனர். காயமடைந்த பெரியசாமி குளித்தலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இதுகுறித்து குளித்தலை போலீஸில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT