கரூர்

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல்

DIN

மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க வேண்டும் என கரூரில் நடைபெற்ற மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
 கரூரில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், திருச்சி மண்டல செயலாளர் ரங்கன் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராஜா ராஜேந்திரன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், மின்வாரியத் துறை அமைச்சர் அறிவித்தவாறு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும்.  ஒப்பந்தத் தொழிலாளர்களை அடையாளப்படுத்த வேண்டும். 
மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு  தீபாவளி போனஸ், கருணைத்தொகை ஆகியவற்றை உடனே வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், கரூர் மாவட்ட நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT