முகப்பு
கரூர்

கண்தான விழிப்புணர்வு தன்னார்வலருக்கு  வரவேற்பு

கண்தான விழிப்புணர்வு மேற்கொள்ளும் தனிமனித சேவையாளருக்கு ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 8:38 AM
பகிர்:

கண்தான விழிப்புணர்வு மேற்கொள்ளும் தனிமனித சேவையாளருக்கு ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருப்பூரைச் சேர்ந்த சிவசுப்ரமணியன்(65), மாநிலம் முழுவதிலும் கண், ரத்த, உடல் தானம் குறித்து பொதுமக்களிடம்  துண்டுபிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். கரூருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த அவருக்கு கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 
சங்கத்தின் மண்டலத் தலைவர் மேலை.பழநியப்பன் தலை மை வகித்தார். எவர்கிரீன் பவுண்டேசன் தலைவர் ஸ்காட் தங்கவேல் அறிமுக உரையாற்றினார். சிவசுப்ரமணியன் தனது விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தார். சங்கத்தின்  மாவட்டத் தலைவர் சேது சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.