கார் திருடிய இரு இளைஞர்கள் கைது
கரூரில் கார் திருடியதாக இரு இளைஞர்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கரூரில் கார் திருடியதாக இரு இளைஞர்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கரூர் அண்ணாவளைவு ரயில்வே குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்லதுரை(55). இவர் ஆக.26ஆம் தேதி தனது காரை ரயில்நிலையம் முன்பு நிறுத்தி விட்டு ரயில் நிலையத்திற்குச் சென்றார். சிறிதுநேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது காரை காணவில்லை.
இதுகுறித்த புகாரின்பேரில் கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், திருச்சி மாவட்டம் ஜீயபுரத்தைச்சேர்ந்த மணிகண்டன்(35), ராமநாதபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் சந்தோஷ்குமார்(23) ஆகியோர் கார் திருடியதைக் கண்டறிந்த போலீஸார் இருவரையும் சனிக்கிழமை கைது செய்து, காரை மீட்டனர்.