திமுக தலைவராக இருந்த கருணாநிதி இறந்தபோது துக்கம் தாங்காமல் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அக்கட்சியினர் தலா ரூ. 2 லட்சத்தை வெள்ளிக்கிழமை நிதியுதவியாக வழங்கினர்.
கருணாநிதி இறந்த துக்கம் தாங்காமல் கரூர் மாவட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த மருதூர் துரைசாமி, புணவாசிப்பட்டி சரோஜா, வடவம்பாடிமதுரைவீரன், வடசேரி கருப்பண்ணன், நெய்தலூர் பாலமுத்து, நெய்தலூர் ராணி ஆகிய 7 பேர் இறந்தனர். இவர்களின் குடும்பங்களுக்கு திமுக மாவட்டச் செயலர் நன்னியூர் ராஜேந்திரன் தலா ரூ. 2லட்சம் நிதியுதவி வழங்கினார்.
குளித்தலை எம்எல்ஏ ராமர், முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், மாவட்ட அவைத்தலைவர் டி. ராஜேந்திரன், பொருளாளர் வி.கருப்பண்ணன், ஒன்றியச் செயலர்கள் உமாபதி, எம்.ரகுநாதன், ஆ.சந்திரன், வி.பி.பிச்சை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.