கரூர்

பைக்கை திருட முயன்ற இளைஞர் கைது

DIN


கரூர் காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (60). இவர் தனது பைக்கை வெள்ளிக்கிழமை இரவு அங்குள்ள தனியார் உணவகம் முன்பு நிறுத்திவிட்டு, சாப்பிடச் சென்றுள்ளார். 
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை மர்ம நபர் திருட முயன்றார்.  இதையறிந்த ஜெகதீசன் சப்தம் போட்டதால், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்த இளைஞரைப் பிடித்து வெங்கமேடு போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து அந்த நபரைக் கைது செய்துவிசாரித்தபோது, அவர் குளித்தலை அடுத்த உப்பாச்சிப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வெள்ளைச்சாமி(23) எனத் தெரியவந்தது. மேலும் விசாரிக்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT