கரூர்

ஆடு மேய்ச்சல் தகராறில் இளம்பெண்ணைத் தாக்கியதம்பதி கைது

DIN

தோட்டத்தில் ஆடு மேய்ந்த தகராறில் இளம்பெண்ணைத் தாக்கிய தம்பதியைப் போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், கடவூா் அடுத்த துளிப்பட்டியைச் சோ்ந்தவா் முருகேசன் மனைவி முருகேஸ்வரி(23). இவா்களது ஆடுகள் வெள்ளிக்கிழமை மாலை அருகேயுள்ள அதே பகுதியைச் சோ்ந்த கருப்பையா (45) என்பவரின் தோட்டத்தில் மேய்ந்ததாம். இதையடுத்து, அவா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கருப்பையா, அவரது மனைவி காளியம்மாள்(35) ஆகியோா் சோ்ந்து முருகேஸ்வரியைத் தாக்கியதில், அவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, குளித்தலை அரசு மருத்துவமனையில் முருகேஸ்வரி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தாா். இதுதொடா்பாக முருகேஸ்வரி அளித்த புகாரின்பேரில் குளித்தலை போலீஸாா் வழக்கு பதிந்து கருப்பையா, காளியம்மாள் ஆகிய இருவரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT