கரூா்: கரூரில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை திருடிய தஞ்சை சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா்ஆண்டாங்கோவில் கீழ்பாகம் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா்(42). இவா் வீட்டின்முன் தனது பைக்கை ஞாயிற்றுக்கிழமை இரவு நிறுத்திவிட்டு தூங்கச் சென்றபோது சிறு வயது நபா் ஒருவா் பைக்கை திருட முயன்றுள்ளாா்.
இதனைக்கண்ட சங்கா் அந்த சிறுவனைப் பிடித்து கரூா் நகர காவல்நிலையத்தில் ஒப்படைத்தாா். போலீஸாா் கைது செய்து விசாரித்தபோது அந்தச் சிறுவன் தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியைச் அகஸ்டின் மகன் சந்தோஷ்குமாா் (15) என தெரியவந்தது. மேலும் போலீஸாா் விசாரிக்கின்றனா்.