கரூர்

அரசுப் பேருந்து - பைக் மோதல்: இளைஞர் சாவு

DIN

அரவக்குறிச்சி அருகே நின்றிருந்த அரசுப் பேருந்து மீது அதிவேக பைக் நிலைத்தடுமாறி மோதியதில் இளைஞர் உயிரிழந்தார். 
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த பள்ளபட்டி அண்ணா நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சசிகுமார்(27). இவர் அண்மையில் புதிதாக ராயல் என்பீல்டு என்ற பைக்கை வாங்கியுள்ளார்.  
இந்த பைக்கில் சனிக்கிழமை இரவு அரவக்குறிச்சி - பழனி சாலையில் பள்ளபட்டி ரங்கராஜ் நகர் அருகே சென்றபோது அங்கு நின்றிருந்த அரசுப் பேருந்து மீது திடீரென பைக் நிலைத்தடுமாறி மோதியது. இதில், சசிகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT