கரூர்

பைக் மோதி நடந்து சென்ற முதியவர் பலி

DIN

பைக் மோதி சாலையோரம் நின்றுகொண்டிருந்த முதியவர் இறந்தார்.
 கரூர் மண்மங்கலம் அடுத்த கீழ்கூரைச் சேர்ந்தவர் முருகையன்(77). இவர் புதன்கிழமை இரவு கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கீழக்கூர் நொய்யல் என்ற இடத்தில் சாலையோரம் நின்றுகொண்டிருந்தபோது அவ்வழியே வேகமாக வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து 
வாங்கல் போலீஸார் வழக்குப் பதிந்து பைக்கை ஓட்டி வந்த வெங்கமேடு பூங்குயில் நகரைச் சேர்ந்த கருணாகரன் மகன் மாணிக்கம்(28) என்பவரைப் பிடித்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

SCROLL FOR NEXT