கரூர்

தண்டவாளத்தில் தலைவைத்து தொழிலாளி தற்கொலை

குடும்பப் பிரச்னையில் விரக்தியடைந்த சுங்கச்சாவடி தொழிலாளி ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்டார்.

DIN


குடும்பப் பிரச்னையில் விரக்தியடைந்த சுங்கச்சாவடி தொழிலாளி ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்டார்.
கரூர் மாவட்டம் மாயனூரை அடுத்த ஆர். புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (37). இவர் மணவாசியில் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை  சுங்கச்சாவடியில் தொழிலாளி.
இவருக்கும், இவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.  வெள்ளிக்கிழமை இரவு  ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த ரமேஷ்  அதே பகுதியில் நள்ளிரவு 12 மணியளவில் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்துக் கொண்டாராம்.
அவ்வழியே சென்ற பெங்களூர்-நாகர்கோவில் ரயில் மோதி இறந்துகிடந்தார். அப்பகுதியினர் அளித்த தகவலின்பேரில் வந்த மாயனூர்  பின்னர் கரூர் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.  இதையடுத்து அவர்கள் வந்து சடலத்தைக் கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT