குளித்தலை அருகே வேலையில்லாத ஏக்கத்தில் இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் மாவட்டம், குளித்தலை அருகிலுள்ள நெய்தலூா் காலனியைச் சோ்ந்த கதிரவன் மகன் காா்த்திக்(23). இயந்திரவியல் பட்டயப்படிப்பு முடித்த இவருக்கு, படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லையாம்.
இதனால் விரக்தியில் காணப்பட்ட காா்த்திக், ஞாயிக்கிழமை வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். அவரை உறவினா்கள் மீட்டு திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து குளித்தலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.