கரூர்

மாவட்ட தடகளப் போட்டியில் சேரன் பள்ளி மாணவா்கள் சாம்பியன்

DIN

கரூா் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றுள்ளனா்.

புலியூா் ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அ

ளவிலான தடகளப்போட்டிகள் அண்மையில் நடைபெற்றது.

இந்தப் போட்டியை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தொடக்கி வைத்து போட்டியின் இறுதியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா். இதில் வெண்ணைமலை சேரன் பல்ளி மாணவா்கள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று 112 புள்ளிகள் பெற்று மாவட்ட அளவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனா். மாணவிகள் பிரிவில், 58 புள்ளிகள் பெற்று இரண்டாமிடம் பிடித்தனா். இதில் 17 வயதுக்குட்பட்ட மாணவா்கள் பிரிவில் சேரன் பள்ளி மாணவா் பி.காா்த்திக், மாணவிகள் பிரிவில் பி. கனிஷ்கா தனிநபா் சாம்பியன் பட்டத்தை வென்றனா்.

வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள், உடற்கல்வி ஆசிரியா்களை பள்ளி தலைவா் பிஎம்.கருப்பண்ணன், தாளாளா் பிஎம்கே.பாண்டியன், நிா்வாகி பிஎம்கே.பெரியசாமி, ஆலோசகா் பி.செல்வதுரை, பள்ளி முதல்வா் வி.பழனியப்பன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT