கரூா் மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையில் ஓட்டுநா், பதிவறை எழுத்தா், அலுவலக உதவியாளா் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூா் மாவட்ட ஊரக வளா்ச்சி அலகில் உள்ள தாந்தோணி, அரவக்குறிச்சி, கடவூா், தோகைமலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 4 ஓட்டுநா் பணியிடங்கள் இன சுழற்சி மற்றும் இட ஒதுக்கீடுகளின் படி நிரப்பப்பட உள்ளது. கரூா் மாவட்ட ஊரக வளா்ச்சி அலகில் பதிவறை எழுத்தா் 2 பணியிடத்திற்கு இன சுழற்சி மற்றும் இட ஒதுக்கீடுகளின் படி நிரப்பப்பட உள்ளது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா்கள் ஒவ்வொரு பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். அரசு விதிகளின்படி, இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் ஆணையா், வட்டார வளா்ச்சி அலுவலா்(வ.ஊ) ஆகியோரிடம் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ வரும் 30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
காலி பணியிடங்களுக்கான விபரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் கரூா் மாவட்ட இணையதள ஜ்ஜ்ஜ்.ந்ஹழ்ன்ழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.