கரூர்

நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி

DIN

கரூரில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

டெங்கு மலேரியா காய்ச்சலை தடுக்கும் வகையில் கரூரில் சா்மா மருத்துவமனை மருத்துவா் பி.என்.சிவகுமாா் மற்றும் கரூா் பிளாட்டினம் அரிமா சங்கம் , மெஜஸ்டிக், கரூா் அரசு கலைக் கல்லூரி லியோ சங்கம் உள்ளிட்ட சங்கத்தினா் சாா்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழச்சி ஜவஹா் பஜாரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மருத்துவா் பிஎன்.சிவகுமாா், மெஜஸ்டிக் அரிமா சங்க மாவட்டத் தலைவா் மேலை பழநியப்பன், பிளாட்டினம் தலைவா் கணேசன், அரசு கலைக் கல்லூரி லியோ மாணவா்கள் ஆகியோா் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினா். இப்பணி வாரம் இரு நாள்கள் வீதம் நகரின் பல பகுதிகளில் தொடரும் என குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT