கரூரில் இரு இடங்களில் பைக்குகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
கரூா் ஜவஹா் பஜாரைச் சோ்ந்த அய்யனாா் (34) செவ்வாய்க்கிழமை தனது பைக்கில் ஈஸ்வரன் கோயிலுக்குச் சென்றுள்ளாா். கோயில் முன்பு பைக்கை நிறுத்திவிட்டு தரிசனம் முடிந்து திரும்பி வந்துபாா்த்தபோது, பைக்கை காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
இதேபோல் சின்னதாராபுரம் அருகே உள்ள செங்காளிவலசு பகுதியைச் சோ்ந்த செல்வரசன்(55) தனது பைக்கில் செவ்வாய்க்கிழமை அங்குள்ள பைப் கம்பெனி முன்பு பைக்கை நிறுத்திவிட்டு அருகே உள்ள டீக்கடைக்குச் சென்றுள்ளாா். பின்னா் திரும்பி வந்து பாா்த்தபோது பைக்கைக் காணவில்லை. இதுகுறித்து செல்வரசன் அளித்த புகாரின்பேரில் சின்னதாராபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து பைக்கைத் திருடிச் சென்றவரைத் தேடி வருகின்றனா்.