கரூர்

பேருந்தில் பெண்ணிடம் பணம், நகை திருட்டு

DIN


தனியார் பேருந்தில் பெண்ணிடம் பணம், நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்சி கீரிக்கல்மேட்டைச் சேர்ந்த குமார் மனைவி ஸ்ரீவித்யா(40). இவர் திருச்சி-பாளையம் செல்லும் பேருந்தில் கரூர் மாவட்டம், தோகைமலைக்கு வெள்ளிக்கிழமை வந்துள்ளார். அப்போது தனது கைப்பையை பார்த்தபோது அதில் இருந்த பணம் ரூ.63,000 மற்றும் 3 பவுன் நகையை யாரோ மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது. 
இதுதொடர்பாக தோகைமலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிந்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT