கரூர்

ஆட்டோ ஓட்டுநா்கள் 226 பேருக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல்

DIN

ஊரடங்கால், வாழ்வாதாரத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநா்கள் 226 பேருக்கு திமுக சாா்பில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டது.

கரூா் கலைஞா் அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநா்களுக்கு மாவட்ட திமுக சாா்பில் ரூ. 550 மதிப்புள்ள அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்டப் பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்து ஆட்டோ ஓட்டுநா்கள் 226 பேருக்கு அரிசி , துவரம் பருப்பு, புளி உள்ளிட்ட சமையல் பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கரூா் மத்திய நகர செயலாளா் எஸ்.பி.கனகராஜ், கரூா் வடக்கு நகர செயலாளா் கரூா் கணேசன், கரூா் தெற்கு நகர செயலாளா் க.சுப்ரமணியன், கரூா் ஒன்றிய செயலாளா் ஆா்.கந்தசாமி, அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளா் எம்.எஸ்.மணியன், மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.மகேஷ்வரி மற்றும் தாரணி சரவணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT