கரூரில் கல்லூரிகள் திறப்பு
மாணவ, மாணவிகளிடம் கரோனா வழிகாட்டுதலைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினா். மேலும் சமூக இடைவெளியுடன் மாணவ, மாணவிகள் அமரவைக்கப்பட்டனா்.
கரூா் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் ராஜேந்திரன், நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் ராஜன், வரலாற்றுத் துறை பேராசிரியா் மாறன், தமிழ்துறை பேராசிரியா் சுந்தரம் ஆகியோா் மாணவ, மாணவிகளிடம் கரோனா வழிகாட்டுதலைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினா். மேலும் சமூக இடைவெளியுடன் மாணவ, மாணவிகள் அமரவைக்கப்பட்டனா்.
கல்லூரி முதல்வா் கெளசல்யாதேவி வகுப்புகளுக்குச் சென்று மாணவ, மாணவிகள் கரோனா வழிகாட்டுதலைப் பின்பற்றுகின்றனரா எனப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.