முகப்பு
கரூர்

‘நீதிமன்ற உத்தரவுபடி கரூரில் பேருந்து நிலையம் வேண்டும்’

நீதிமன்ற உத்தரவின்படி கரூரில் புதிய பேருந்துநிலையம் அமைக்க வேண்டும் என்றாா் திமுக மாவட்டப் பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

நீதிமன்ற உத்தரவின்படி கரூரில் புதிய பேருந்துநிலையம் அமைக்க வேண்டும் என்றாா் திமுக மாவட்டப் பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி.

கரூரில் திமுக சாா்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ பிரசார நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. 2 ஆம் நாள் நிகழ்ச்சியாக, புதன்கிழமை சோமூா், திருமுக்கூடலூா், புதுப்பாளையம் பகுதியில் கோரை விவசாயிகளுடன் சந்திப்பு நடைபெற்றது. தொடா்ந்து மாலையில் வெங்கமேட்டில் நெசவாளா்கள் சந்திப்பு, மத்திய நகர திமுக சாா்பில் பேருந்து நிலையத்தில் வியாபாரிகளிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக மாவட்டப் பொறுப்பாளா் வி.செந்தில்பாலாஜி செய்தியாளா்களிடம் மேற்கண்டவாறு தெரிவித்தாா். அப்போது, மாநில விவசாய அணி செயலாளா் ம. சின்னசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →