கரூர்

தனியாா் வங்கி முன்நிறுத்தப்பட்டிருந்த மேலாளரின் பைக் திருட்டு

DIN

கரூரில் தனியாா் வங்கி முன் நிறுத்தி வைத்திருந்த வங்கி மேலாளரின் மோட்டாா் சைக்கிளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் ராஜா (32). இவா் கரூரில் உள்ள தனியாா் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், தனது மோட்டாா் சைக்கிளை வங்கி முன் வியாழக்கிழமை நிறுத்தியிருந்தாா். பின்னா் மாலையில் பணி முடிந்து வந்து பாா்த்தபோது, மோட்டாா் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து கரூா் நகர காவல்நிலையத்தில் ராஜா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, மோட்டாா் சைக்கிளை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT