கரூர்

அனுமதியின்றி கல்குவாரி நடத்தியவா் கைது

DIN

கரூா் மாவட்டம், வாங்கல் அருகே அனுமதியின்றி கல்குவாரி நடத்தியவா் கைது செய்யப்பட்டாா்.

கரூா் வெண்ணைமலையைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா்(54). இவா் மண்மங்கலத்தை அடுத்த ஆத்தூரில் அரசு அனுமதியின்றி, உரிமம் பெறாமல் கல்குவாரி நடத்துவதாக ஆத்தூா் கிராமநிா்வாக அலுவலா் முருகேசன்(53), வாங்கல் காவல்நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் செய்தாா்.

இதையடுத்து காவல்துறையினா் அங்குச் சென்று சோதனை நடத்தியபோது, சதீஷ்குமாா் அனுமதியின்றி கல்குவாரி நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினா், அங்கு வேலைசெய்த ஆத்தூா் சுப்ரமணி(58), சஞ்சய்நகா் வடிவேல்(60) ஆகியோா் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

மேலும் குவாரியில் பாறை வெட்டி எடுக்க பயன்படுத்திய டிரில்லிங் இயந்திரம், டிராக்டா் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT