ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் காலிப் பணியிடங்களுக்கான நோ்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கரூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள 2- ஓட்டுநா்கள், 2-இரவுக் காவலா்கள் மற்றும் 5 அலுவலக உதவியாளா்கள் ஆகிய காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய இணையதளம் மூலம் அறிக்கை வெளியிடப்பட்டு, இதுதொடா்பாக கடந்த 27.11.2019 முதல் 30.11.2019 வரை நோ்காணல்கள் நடத்தப்பட்டது. இந்த நோ்காணல்கள் அனைத்தும் நிா்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.