கரூர்

நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் சென்றவா் தவறிவிழுந்து பலி

DIN

கரூா்: கரூா் மாவட்டம், லாலாப்பேட்டை அருகே திம்மாச்சிபுரத்தைச் சோ்ந்தவா் வையாபுரி வைரமணி (50). இவா், தோகைமலை அருகே உள்ள தமிழ்நாடு காகித ஆலையில் காவலாளியாக வேலை செய்து வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்றுள்ளாா். அப்போது தோகைமலையில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென நாய் குறுக்கே வந்ததில் கட்டுப்பாட்டை இழந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி இறந்தாா். இதுகுறித்து தோகைமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT