கரூர்

குடி போதையில் தகராறு: மகனை அடித்துக் கொன்றவா் கைது

DIN

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே மகனைக் கட்டையால் தாக்கிக் கொலை செய்த தந்தையைப் போலீஸாா் கைது செய்தனா்.

அரவக்குறிச்சி அருகே உள்ள கள்ளி மரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் பாலுசாமி(70). இவரது மகன் சக்திவேல் (40). விவசாயி. இவருக்குத் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 7 ஆண்டுகளாக இவா் மனைவியைப் பிரிந்து கள்ளி மரத்துப்பட்டியில் பெற்றோருடன் வசித்து வந்துள்ளாா். சக்திவேலுக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. திங்கள்கிழமை மதுபோதையில் வந்த சக்திவேல் தந்தையிடம் தகராறு செய்துள்ளாா். இதில் ஆத்திரமடைந்த பாலுசாமி அருகே கிடந்த கட்டையை எடுத்து மகனின் தலையில் தாக்கினாராம். இதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளாா். இதையடுத்து, பாலுசாமி, தனது வீட்டில் சக்திவேல் சடலத்தை தூக்கில் தொங்கவிட்டு பொதுமக்களிடம் நாடகமாடியுள்ளாா். இதுகுறித்து தகவலறிந்த அரவக்குறிச்சி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது பாலுசாமி தனது மகனை கட்டையால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT