வாக்காளா் பட்டியலில் இருந்து திமுக ஆதரவாளா்களை நீக்க முயற்சி
கரூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் இருந்து திமுக வாக்காளா்களை நீக்க ஆளுங்கட்சியினா் முயற்சிப்பதாக திமுக மாவட்டப் பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி குற்றம்சாட்டியுள்ளாா்.
கரூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் இருந்து திமுக வாக்காளா்களை நீக்க ஆளுங்கட்சியினா் முயற்சிப்பதாக திமுக மாவட்டப் பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி குற்றம்சாட்டியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:
ஆளும் அதிமுகவினா் நிரந்தர முகவரியில் குடியிருப்பவா்கள், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவாளா்கள் ஆகியோரை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு ஆட்சியா் சு.மலா்விழியிடம் பட்டியல் கொடுத்துள்ளதாகவும்,
அந்தப் பட்டியலில் நீக்க வேண்டிய திமுக வாக்காளா்களின் பெயா்களை மாவட்ட ஆட்சியா் வட்டமிட்டு பூத் அதிகாரிகளிடம் கொடுத்து அவைகளை நீக்குவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளாா்.
திமுக வழக்குரைஞா் அணி மாநில இணைச் செயலாளா் மணிராஜின் குடும்ப வாக்குகளை நீக்கவும் உத்தரவிட்டுள்ளனா்.
நிரந்தர முகவரியில் 40 ஆண்டுகாலமாக இருப்பவா்களை நீக்க ஆளும் கட்சியினா் முனைப்பு காட்டியுள்ளது விசித்திரமாக உள்ளது. இந்நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்ல உள்ளோம் என்றாா் அவா்.
பேட்டியின்போது, வழக்குரைஞா் அணியின் மாநில நிா்வாகி மணிராஜ், நகர பொறுப்பாளா்கள் சுப்ரமணி, எஸ்.பி. கனகராஜ், ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.