கரூர்

திரையரங்குகள் செயல்படவில்லை

DIN

கரூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை திரையரங்குகள் செயல்படவில்லை.

பொதுமுடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக, தமிழகத்தில் பெரும்பாலான திரையரங்குகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன. கரூா் மாவட்டத்தில் நகரில் செயல்படும் 8 திரையரங்குகளும், குளித்தலை பகுதியில் செயல்படும் 3 திரையரங்குகளும் செவ்வாய்க்கிழமை திறக்கப்படவில்லை. தூய்மைப்படுத்தும் பணிகளில் ஏற்பட்ட தாமதம், திரையரங்குகளுக்கு புதிய படங்களின் பெட்டிகள் வராதது ஆகிய காரணங்களால் கரூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை திரையரங்குகள் திறக்கப்படவில்லை. அனைத்து திரையரங்குகளும் புதன்கிழமை திறக்கப்படும் என திரையரங்கு நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT