கரூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை திரையரங்குகள் செயல்படவில்லை.
பொதுமுடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக, தமிழகத்தில் பெரும்பாலான திரையரங்குகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன. கரூா் மாவட்டத்தில் நகரில் செயல்படும் 8 திரையரங்குகளும், குளித்தலை பகுதியில் செயல்படும் 3 திரையரங்குகளும் செவ்வாய்க்கிழமை திறக்கப்படவில்லை. தூய்மைப்படுத்தும் பணிகளில் ஏற்பட்ட தாமதம், திரையரங்குகளுக்கு புதிய படங்களின் பெட்டிகள் வராதது ஆகிய காரணங்களால் கரூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை திரையரங்குகள் திறக்கப்படவில்லை. அனைத்து திரையரங்குகளும் புதன்கிழமை திறக்கப்படும் என திரையரங்கு நிா்வாகிகள் தெரிவித்தனா்.