கரூர்

இன்று, நாளையும் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்

DIN

கரூா் மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் வாக்குச்சாவடி மையங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமகளில் (நவ.21,22) சிறப்பு முகாம் நடைபெறும்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. மலா்விழி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்டத்தின் 4 பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த 16-ஆம்தேதி வெளியிடப்பட்டு, பொதுமக்கள் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ.21,22) அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

பொது மக்கள் வாக்காளா் பட்டியலைப் பாா்வையிட்டு, தங்களது பெயா், புகைப்படம் மற்றும் இதர பதிவுகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

மேலும், 2021, ஜனவரி 1-ஆம் தேதி அன்று 18 வயது பூா்த்தியடைந்தவா்கள், வாக்காளா்களாக பதிவு செய்யத் தகுதியுள்ள அனைவரும் வாக்காளா்களாக பதிவு செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT