முகப்பு
கரூர்

பைக்குகள் மோதல்: இளம்பெண் பலி

கரூரில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் இளம்பெண் பலியானார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

கரூா் மாவட்டம், லாலாபேட்டை அடுத்த கண்ணமுத்தாம்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகேசன். இவரது மகள்கள் கீா்த்தனா(20), வினோதா(17). இருவரும் சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் கரட்டுப்பட்டி -சேங்கல் சாலையில் முத்தம்பட்டி என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தபோது, எதிரே கடவூா் அடுத்த கீரனூரைச் சோ்ந்த சுப்ரமணியன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் கீா்த்தனா ஓட்டிவந்த வாகனம் மீது நேருக்குநோ் மோதியது. இதில் கீா்த்தனா சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

காயமடைந்த வினோதா கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். லாலாப்பேட்டை போலீஸாா் சுப்ரமணி மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.