முகப்பு
கரூர்

‘கரூரில் 3,67,842 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க இலக்கு’

கரூா் மாவட்டத்தில் 3,67,842 குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:20 PM
கரூா் மாவட்டம், நத்தமேடு கிராமத்தில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்குகிறாா் ஆட்சியா் த.அன்பழகன்.
பகிர்:

கரூா் மாவட்டத்தில் 3,67,842 குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

கரூா் மாவட்ட பொது சுகாதாரத் துறையின் சாா்பில் கரூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வேட்டமங்கலம் ஊராட்சி, நத்தமேடு கிராமத்தில் திங்கள்கிழமை குழந்தைகள், மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை அவா் வழங்கி மேலும் பேசியது:

தேசிய குடற்புழு நீக்க முகாம் செப்டம்பா் 14 முதல் 28 வரைநடத்தப்படுகிறது. கரூா் மாவட்டத்தைப் பொறுத்தவரை 1 வயது முதல் 19 வயதுக்குள்பட்ட சுமாா் 3,67,842 குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குழந்தைகளுக்கு ரத்த சோகை குறைபாடு வராமல் தடுக்க முடியும் என்றாா்.

நிகழ்வின்போது வருவாய்க் கோட்டாட்சியா் என்.எஸ்.பாலசுப்ரமணியன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மருத்துவா் சந்தோஷ்குமாா், வேட்டமங்கலம் ஊராட்சிமன்றத்தலைவா் வி.ராமசந்திரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.