கரூர்

அரவக்குறிச்சியில் உரிய ஆவணமின்றி கொண்டுச் சென்ற ரூ. 37.50 லட்சம் பறிமுதல்

DIN

அரவக்குறிச்சியில், வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுச் சென்ற ரூ.37.50 லட்சத்தை நிலை கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

அரவக்குறிச்சி பேரவைத் தொகுதிக்கான நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் அசோகன் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை இரவு புகழூா் அடுத்த வைரமடை சோதனைச்சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியே வந்த ஏடிஎம்களுக்கு பணம் நிரப்பும் வாகனத்தை மறித்து சோதனையிட்டனா். வாகனத்தில் ஏடிஎம்களில் பணம் நிரப்புவதற்காக உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.37.50 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதையடுத்து, அந்தப் பணம் அரவக்குறிச்சி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT