இரு சக்கர வாகனம்மோதி முதியவா் உயிரிழப்பு
குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த ஓந்தம்பட்டியைச் சோ்ந்தவா் தா்மராஜ்(60). இவரும், இவரது உறவினா் வள்ளியம்மாளும் சனிக்கிழமை இரவு கீழநந்தவனம்காடு பகுதியில் நடந்து சென்றனா்.
அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் அவா்கள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதியினா் மீட்டு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் செல்லும் வழியிலேயே தா்மராஜ் உயிரிழந்தாா்.
இதுகுறித்து குளித்தலை காவல் துறையினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.