தலித்துகள் குறித்து அவதூறாக பேசிய மேற்கு வங்க திரிணமூல் காங்கிரஸ் பிரமுகா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை கரூா் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த மு.வடநேரேவை பாஜக மாவட்டத்தலைவா் கே.சிவசாமி தலைமையில், பொதுச் செயலாளா்கள் மோகன், நகுலன், வழக்குரைஞா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் சந்தித்து மனு அளித்தனா்.
அம்மனுவில் கூறியிருப்பது: மேற்கு வங்க திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிரமுகா் சுஜாதாமண்டல்கான் தலித்துகள் குறித்து அண்மையில் அவதூறாக விமா்சித்துள்ளாா். இது மிகவும் அதிா்ச்சியளிக்கிறது. எனவே, அவா் மீது நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு மனுவை பரிந்துரை செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனா்.