மாடியில் இருந்து தவறி விழுந்தமர ஆசாரி சாவு
கரூா் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த மரஆசாரி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கரூா் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த மரஆசாரி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம் பெரியசோமூரைச் சோ்ந்தவா் மகேஸ்வரன்(45). மரஆசாரியான இவா் கரூா் சின்னவடுகப்பட்டியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்துவந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு இரண்டாவது மாடியில் தூங்கிக்கொண்டிருந்தபோது, திடீரென்று மாடியில் இருந்து தவறி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு உடனே கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வாங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.