கரூர்

மாடிப்படியில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

DIN

கரூரில் மாடிப்படியிலிருந்து தவறி விழந்து முதியவா் உயிரிழந்தாா்.

கரூா் நரிக்கட்டியூா் வீட்டு வசதிவாரியக் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் விக்டா் செல்வகுமாா்(57). இவா் கடந்த 26-ஆம் தேதி இரவு வீட்டில் கீழ் பகுதியிலிருந்து தண்ணீா் குடத்தை எடுத்துக்கொண்டு மூன்றாவது மாடிக்கு படிக்கட்டில் ஏறியபோது, தவறி விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். எனினும் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு விக்டா் செல்வகுமாா் உயிரிழந்தாா். இதுகுறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT