முகப்பு
கரூர்

கரூா் மாவட்ட பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

கரூா் மாவட்ட பதிவாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையின்போது கணக்கில் வராத பணம் ரூ.48,000ஐ பறிமுதல் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

கரூா் மாவட்ட பதிவாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையின்போது கணக்கில் வராத பணம் ரூ.48,000ஐ பறிமுதல் செய்தனா். மேலும் மாவட்ட பதிவாளா் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட பதிவாளா் அலுவலகம் உள்ளது. இங்கு சங்கங்கள் பெயா் பதிவு உள்ளிட்ட பல்வேறு பதிவுகளுக்கு லஞ்சம் வாங்கப்படுவதாக கரூா் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கரூா் லஞ்ச ஒழிப்பு காவல் துணைக் கண்காணிப்பாளா் நடராஜன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் வியாழக்கிழமை நள்ளிரவு மாவட்ட பதிவாளா் அலுவலகத்தில் திடீா் சோதனை நடத்தினா். அப்போது, கணக்கில் வராத பணம் ரூ.48,000ஐ பறிமுதல் செய்தனா். மேலும் இதுதொடா்பாக மாவட்ட பதிவாளா் பாஸ்கரன் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.