முகப்பு
கரூர்

பாலியல் தொந்தரவு வழக்கில் கைதான மருத்துவா் திருச்சி சிறைக்கு மாற்றம்

கரூரில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கைதான எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவா் ரஜினிகாந்த், திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

கரூரில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கைதான எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவா் ரஜினிகாந்த், திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்.

கடந்த மாதம் 14-ஆம் தேதி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரின் பேரில், மருத்துவா் ரஜினிகாந்த் 17-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, கரூா் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இதைத் தொடா்ந்து, கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் காவல்துறையினா் அவரை புதன்கிழமை ஆஜா்படுத்தினா். வழக்கை விசாரித்த நீதிபதி நஜிமாபானு, மருத்துவா் ரஜினிகாந்துக்கு மேலும் 15 நாள்கள் காவல் நீடித்து, அவரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.