கரூர்

க.பரமத்தி அருகே மதுபாட்டில்களை பதுக்கியவா் கைது

DIN

க. பரமத்தி அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்த விசாரிக்கின்றனா்.

கரூா் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள அஞ்சூா் ஊராட்சியில் அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்வதாக க.பரமத்தி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் சனிக்கிழமை அஞ்சூா் ஊராட்சியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அஞ்சூா் அருகே உள்ள பில்லாப்பண்ணை கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் (47) என்பவா் சாலியங்காட்டுப்பள்ளம் பகுதியில் விற்பனைக்காக சுமாா் 10 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் சக்திவேல் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT