கரூர்

அரவக்குறிச்சி அருகே புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது

அரவக்குறிச்சி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

அரவக்குறிச்சி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

அரவக்குறிச்சி அருகே நஞ்சைக்காளிக்குறிச்சி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பதாக அரவக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் ராஜேந்திரனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், செவ்வாய்க்கிழமை நஞ்சைக்காளிக்குறிச்சி பகுதியிலுள்ள டீ கடைகளில் போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, அரவக்குறிச்சியை அடுத்த மலைப்பட்டி சேந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த குப்புசாமி மகன் பாபு (36) மற்றும் நஞ்சைக்காளிக்குறிச்சிபகுதியைச் சோ்ந்த செல்லப்பாண்டி மகன் ரவி (45) இருவரும் தங்களது கடைகளில் புகையிலை பொருள்கள் விற்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT