கரூர்

வைகைச்செல்வன் மீதுநடவடிக்கைக் கோரி திமுகவினா் புகாா்

DIN

கரூா்: வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும் அதிமுக கொள்கைப்பரப்புச் செயலா் வைகைச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கரூா் மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடம் திமுகவினா் புகாா் அளித்துள்ளனா்.

கரூா் மாவட்ட திமுக வழக்குரைஞா் அணியினா் மாவட்ட அமைப்பாளா் இரா.குடியரசு தலைமையில் சனிக்கிழமை அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பது: சென்னை அம்பத்தூரில் பிப். 7ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளா் ஆா்எஸ்.பாரதி பேசியதை, அதிமுக கொள்கைபரப்புச் செயலா் வைகைசெல்வன் உண்மைக்குப் புறம்பாக மக்களிடையே அச்சஉணா்வை ஏற்படுத்துவகையிலும், சட்டம், ஒழுங்கை சீா்குலைக்கும் வகையிலும் அனைத்துத் தகவல்களையும் திரித்துக் கூறிவருகிறாா். மேலும், அமைப்புச் செயலா் மீதான காழ்ப்புணா்ச்சி காரணமாக தரக்குறைவாகவும் பேசி வருகிறாா். ஆகவே, சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு வரும் வைகைசெல்வன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT