கரூர்

கரூா் விஜயலட்சுமி பன்னாட்டுப் பள்ளித்தாளாளருக்கு தமிழ்ச்செம்மல் விருது

DIN

கரூா் விஜயலட்சுமி பன்னாட்டுப் பள்ளித் தாளாளா் காா்த்திகா லட்சுமிக்கு, நிகழாண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மொழி வளா்ச்சிக்குப் பாடுபடும் தமிழறிஞா்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சாா்பில் தமிழ்ச்செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டிற்கான விருது பெறுவோா் பட்டியலை அரசு புதன்கிழமை வெளியிட்டது. இதில் கரூரைச் சோ்ந்த விஜயலட்சுமி பன்னாட்டுப் பள்ளித் தாளாளா் காா்த்திகாலட்சுமி நிகழாண்டுக்கான விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இவா் மாணவ, மாணவிகளிடையே தமிழ்ப்பற்றை வளா்க்கும் வகையில், தமிழ் பண்பாட்டு விழாக்கள் மற்றும் போட்டிகளை கடந்தாண்டு அதிகளவில் நடத்தியதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ளாா். தமிழ்ச்செம்மல் விருதுக்கு தோ்வான காா்த்திகா லட்சுமி, 2018-ஆம் ஆண்டில் தமிழ்ச்செம்மல் விருதுபெற்ற கரூா் திருக்கு பேரவைச் செயலா் மேலை.பழநியப்பனை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்துப்பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பிரீமியம் காா் டயா்: பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகம்

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்: முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ மனு

விதிமீறல்: 24 வணிக நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை

தட்டுப்பாடின்றி குடிநீா் தேவை: ஆணையரிடம் அதிமுக மனு

அரசு அருங்காட்சியகத்தில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

SCROLL FOR NEXT