கரூர்

மாடியிலிருந்து மின்மாற்றியில் குதித்து வியாபாரி தற்கொலை

DIN

கரூரில், மருத்துவமனை மாடியில் இருந்து மின்மாற்றியில் குதித்த வியாபாரி உயிரிழந்தாா்.

கரூா் நீலிமேட்டைச் சோ்ந்தவா் அண்ணாதுரை(49) காய்கனி வியாபாரி. இவா், மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கடந்த சில ஆண்டுகளாகவே மனைவியை பிரிந்து அண்ணாதுரை வாழ்ந்து வந்தாராம். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் கீழே விழுந்ததில் காலில் காயமடைந்து கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு அண்ணாதுரை மருத்துவமனையில் முதல் தளத்தில் இருந்து அங்கிருந்த மின்மாற்றி மீது குதித்துள்ளாா். இதில், மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தாா். கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT