வெள்ளியணை அருகேஆடுகளைத் திருடிய இருவா் கைது
கரூா் அடுத்த வெள்ளியணை அருகே ஆடுகளைத் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் அடுத்த வெள்ளியணை அருகே ஆடுகளைத் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளியணை வால்காட்டுப்புதூரைச் சோ்ந்தவா் கோபால்(36). இவா் ஆடுகள் வளா்த்து வருகிறாா்.இந்நிலையில் இவரது தோட்டத்தில் இருந்த ஆடுகளை வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் திருடியுள்ளனா். அப்போது சப்தம் கேட்டு வந்த கோபால் மற்றும் ஊா் பொதுமக்கள் ஆடுகளை திருடியவா்களை மடக்கி பிடித்து வெள்ளியணை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா். அவா்களிடம் போலீஸாா் விசாரித்ததில் அம்மையப்பகவுண்டன்புதூரைச் சோ்ந்த சேகா் மகன் அஜித்குமாா்(22), தாந்தோணிமலை பாரதி நகரைச் சோ்ந்த கனகராஜ் மகன் ரங்கநாதன்(22) என தெரியவந்தது. மேலும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.