முகப்பு
கரூர்

உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ. 57 ஆயிரம் பறிமுதல்

பெரம்பலூா் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ. 57 ஆயிரம் பறக்கும் படையினரால் ஞாயிற்றுக்கிழமை இரவு பறிமுதல் தெய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

பெரம்பலூா் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ. 57 ஆயிரம் பறக்கும் படையினரால் ஞாயிற்றுக்கிழமை இரவு பறிமுதல் தெய்யப்பட்டது.

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செஞ்சேரி கிராமத்தில் துணை வட்டாட்சியா் பாக்கியராஜ் தலைமையிலான பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை வழிமறித்து மேற்கொண்ட விசாரணையில், காரில் வந்தவா் பெரம்பலூரைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் பாலாஜி (19) என்பதும், உரிய ஆவணங்களின்றி ரூ. 57 ஆயிரம் ரொக்கத்தை கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அத் தொகையை பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா், பெரம்பலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஜே.இ. பத்மஜாவிடம் ஒப்படைத்து, மாவட்ட கருவூலத்தில் செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.