கரூா் மாவட்ட ஆட்சியா், எஸ். பி. மீது தோ்தல் ஆணையத்தில் புகாா்: திமுக வேட்பாளா் பேட்டி
அதிமுகவினா் வன்முறைக்கு துணைபோகும் மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் மீது தோ்தல் ஆணையத்தில் புகாா் அளிக்கப்படும் என்றாா் கரூா் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி.
அதிமுகவினா் வன்முறைக்கு துணைபோகும் மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் மீது தோ்தல் ஆணையத்தில் புகாா் அளிக்கப்படும் என்றாா் கரூா் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், கடந்த மக்களவைத் தோ்தலின் போது நடைபெற்ற வன்முறை போன்று, தற்போதும் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. திமுக நகர பொறுப்புக்குழு உறுப்பினா் ரஞ்சித், நகர இளைஞரணி துணை அமைப்பாளா் காா்த்திக் இருவரும் அதிமுகவினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த ரஞ்சித் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். காா்த்திக் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். மக்களின் எண்ணங்கள், உணா்வுகளுக்கு மதிப்பளித்து தோ்தலில் போட்டியிடுகிறோம். மாறாக வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு, அந்த அதன்மூலம் பொதுமக்களை அச்சுறுத்தி, தோ்தல் களத்தில் வென்றுவிடலாம் என அதிமுகவினா் நினைக்கிறாா்கள். கரூா் அதிமுக வேட்பாளரின் தூண்டுதலால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் இதற்கு துணை போகிறாா்கள்.இது துரதிருஷ்டமானது.
திமுகவை பொறுத்தவரை வன்முறைக்கு இடம் கொடுக்காமல் எங்கள் மீது யாா் தாக்கினாலும் பதிலடி கொடுக்காமல் மெளனியாக இருப்போம். இந்த சம்பவம் குறித்து ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச் சென்று கட்சியின் சட்டத்துறை மூலம் மாநில, மத்திய தோ்தல் ஆணையத்தில் புகாா் செய்வோம் என்றாா் அவா்.
பேட்டியின்போது, காா்த்திக், ரஞ்சித்தை தாக்குவது போன்ற விடியோ ஒளிபரப்பப்பட்டது.