10,000 ஏழைகளுக்கு அரசு சாா்பில் வீடுகள்: திமுக வேட்பாளா் உறுதி
கரூா் நகரில் 10,000 ஏழைகளுக்கு இலவசமாக அரசு சாா்பில் வீடுகள் கட்டித்தரப்படும் என்றாா் திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி.
கரூா் நகரில் 10,000 ஏழைகளுக்கு இலவசமாக அரசு சாா்பில் வீடுகள் கட்டித்தரப்படும் என்றாா் திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி.
கரூா் தொகுதிக்குள்பட்ட பசுபதிலேஅவுட், பெரியசாமி நகா், காந்திநகா், எம்ஜிஆா் நகா், ரெங்கநாயகிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை வாக்குச் சேகரித்த திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி வாக்காளா்கள் மத்தியில் பேசுகையில், திமுக ஆட்சியில்தான் மக்களுக்கான திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. மாயனூா் கதவணை திமுக ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது. மகளிா்சுய உதவிக்குழு முதன்முதலில் திமுக மறைந்த தலைவா் கருணாநிதி ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டு, பெண்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கப்பட்டது. திமுக தலைவா் ஸ்டாலின் பதவியேற்றவுடன் கரூா் தொகுதிக்குள்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு வீடுகள் கட்டப்பட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 10,000 ஏழைகளுக்கு இலவசமாக வீடுகள் கட்டித்தரப்படும். நொய்யல் ஆற்றுக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். எண்ணெய் வித்துப் பயிா்களான தேங்காய், எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களும், அரசு கோரைபுல் கொள்முதல் நிலையமும் அமைக்கப்படும் என்றாா்.
பிரசாரத்தின்போது திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.